பிரான்ஸ் நாட்டில் இரட்டை கொலை வழக்கில் இலங்கை நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில மரபணு சான்றுகளை சேகரித்து, குற்றவாளியை தேடி வந்த நிலையில் இலங்கையர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த புதன்கிழமை (18-01-2023) Rennes (Ille-et-Vilaine) நகரில் வைத்து 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபருக்கும் பொலிஸார் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், சந்தேகநபர் அதனை மறுத்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.