ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோவ் கூறியதாவது: வட கொரிய படை வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்துப் போராடியுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் புடின் மற்றும் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். போரில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது.