News

முற்றியது போர்; ஈரானின் முக்கிய தளபதி அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

 

ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

ஈரான்- இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்து உள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர் உச்ச தலைவர் அலி கமானியின் நெருங்கிய ராணுவ ஆலோசகரும் ஆவார்.

ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி அலி சட்மானி தளபதியாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஈரானில் உள்ள சுமார் 6000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top