News

ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு: அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

 

ஈரான்-இஸ்ரேல் போரில் ராணுவ தலையீடு தொடர்பாக, அமெரிக்காவிற்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புடினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

இந்நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க கூடாது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியதாவது:

இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீட்டிற்கு எதிராக அமெரிக்காவை நாங்கள் எச்சரிக்க விரும்புகிறோம். எந்தவொரு நடவடிக்கையும் மிகவும் ஆபத்தானது. கணிக்க முடியாத வகையில் மோசமான விளைவுகளை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ரஷ்யா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரிப்பதா, இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top