News

பிரான்ஸ் இசை விழாவில் 145 பேருக்கு ஊசிக்குத்து: 12 பேர் கைது

பிரான்சில் இசை விழா ஒன்றின்போது 145 பேர் சிரிஞ்ச் ஊசியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமை நிகழ்ந்த இசை விழாவின்போது, இரவு 9.15 மணியளவில் ஏராளமானோர் சிரிஞ்ச் ஊசியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர்களில் பலர் 14 வயது முதல் 20 வயது வரையுள்ள பெண்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top