நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது, ஈரானின் அணுசக்தி திட்டம் “முழுமையாக அழிக்கப்பட்டது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இதன்போது தெஹ்ரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டமை தொடர்பில் பென்டகன் வெளியிட்ட அறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து பேசிய ட்ரம்ப், “இது முழுமையான அழிப்பு என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு ஆகியவை மேற்கொண்ட பகுப்பாய்வுகள் தாக்குதல் தொடர்பான செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தன.
குறித்த தாக்குதல் தொடர்பான அறிக்கையை நன்கு அறிந்த இரண்டு பேர், தாக்குதல்கள் குறைந்த சேதத்தையே ஏற்படுத்தியதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு முன்பு ஈரான் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்புக்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிந்தது என்றும் கூறியுள்ளனர்.
அது அவ்வாறு நடக்கவில்லை. நாங்கள் வேகமாக செயல்பட்டதால், அவர்களுக்கு எதையும் வெளியே எடுக்க வாய்ப்பு இல்லை என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்க உளவுத்துறையின் ஆரம்ப அறிக்கை மிகவும் உறுதியற்றது. எங்களுக்குத் தெரியாது என்று உளவுத்துறை கூறுகிறது. இந்த அறிக்கை எதிர்ப்பாளர்களிடையே மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
எனினும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தீர்க்கமானவை.
மேலும், அந்த தாக்குதல்களே போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. நான் ஹிரோஷிமாவின் உதாரணத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, நாகசாகியின் உதாரணத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அது தான் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்