நான்கு வாரங்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் விநியோக மையங்களில் மனிதாபிமான உதவியை பெறச்சென்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,066 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
உதவி மையங்களை “மரணப் பொறிகள்” என்று அழைத்த காசா அதிகாரசபை, வெளியிட்ட அறிக்கையில், உதவி தேடுபவர்கள் 39 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த ‘மையங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றில் நடப்பது ஒரு முழுமையான போர்க்குற்றமாகும், இதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முதன்மை மற்றும் நேரடி பொறுப்பைக் கொண்டுள்ளது.
பட்டினியால் வாடும் பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு, பின்னர் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைகளின்படி தினசரி அடிப்படையில் முறையாகவும் வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப்படும் இந்த தொடர்ச்சியான குற்றத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்,” என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
“ஆக்கிரமிப்பு, உணவை வெகுஜனக் கொலைக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறது, அது ‘உதவி’ என்று கூறுவதை அழிப்பு மற்றும் ஆதிக்கத்திற்கான கருவியாக மாற்றுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.