செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில் இன்று மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன.
ஒரு குழந்தைகள் – அருந்தும் பால் போச்சி ( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது, இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.