News

போர் நிறுத்தத்தை மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. சர்வதேச நாடுகள் அதிர்ச்சி

 

காசாவில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10-ந் தேதி முதல் அங்கே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதனால் காசாவை விட்டு வெளியேறி இருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததால் அவர்களிடையே மகிழ்ச்சியும் திரும்பி உள்ளது. இந்த நிலையில் காசாவின் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று திடீரென தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் அங்கே குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அத்துடன் தரைவழி தாக்குதலும் நடந்தது.

அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரம் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்து உள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நேட்டன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மிறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிட உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) ஆலோசனைக் கருத்தை வெளியிட உள்ளது. இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியமான தருணத்தில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top