இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பயணிகள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து, யோக்யகர்த்தா நகரத்திற்கு பஸ் சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
