ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காபூல் நகரின் முக்கிய வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும் ஷஹர்-இ-நவ் பகுதியில் ஓட்டலை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூலில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இந்த இடம் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
