ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்றும் போர் முடிவுக்கு வராத சூழல் தான் நிலவுகிறது. இதனிடையே போர் நிறுத்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ரஷ்ய படையெடுப்பின் போது உக்ரைன் மிகக் குளிரான வெப்பநிலையை அனுபவித்து வரும் சூழலில் இந்த தாக்குதல்கள் நடந்தன. மேலும் இந்த தாக்குதல்களில் இரண்டாம் உலகப் போரின் சின்னமான சோவியத் சகாப்த நினைவுச்சின்னம் சேதமடைந்தது.
