News

தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்

 

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 288 பேர் இருந்தனர்.

விமானம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்க முற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. டயரில் பற்றிய தீ, படிப்படியாக விமானத்தின் அடிப்பகுதி வரை பரவியது. அத்துடன் புகையும் அதிகப்படியாக வெளியேறியது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து விமானத்தில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த 288 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் திரிபுவன் விமான நிலைய பணிகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. உராய்வு காரணமாக டயரில் தீப்பற்றி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top