News

அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அலமேடா கவுண்டி பகுதிக்குட்பட்ட பிளசண்டன் மற்றும் சுனோல் நகர எல்லைப் பகுதிகளில் நேற்று பிற்பகலில் “லிட்டில் ஃபயர்” எனப் பெயரிடப்பட்ட காட்டுத் தீ திடீரெனப் பற்றி எரியத் தொடங்கியது. கடும் வெப்பம், உலர்ந்த புற்பகுதிகள் மற்றும் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக தீ மிக வேகமாகப் பரவி, குறுகிய நேரத்திலேயே 950 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியுள்ளது.

லிட்டில் வேலி சாலை மற்றும் ஹப்பார்ட் லேன் சந்திப்பு பகுதி ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 950 ஏக்கர் எரிந்துள்ள நிலையில், 10% மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரூபி ஹில் சொகுசு குடியிருப்பு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள சுனோல் பகுதி மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் படைகளின் கலிபோர்னியா வனத்துறை, அலமேடா கவுண்டி தீயணைப்புப் படை மற்றும் லிவர்மோர்-பிளசண்டன் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலப்பரப்பில் புல்டோசர்கள் மற்றும் எஞ்சின்கள் மூலமும், வான்வழியாக சிறப்பு ஏர்-டேங்கர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடர்ந்த புதர் மற்றும் மலைப்பகுதிகள் காரணமாக தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் பிளசண்டன் மூத்த குடிமக்கள் மையத்தில் தற்காலிக நிவாரண மற்றும் உதவி முகாம் அமைக்கப்பட்டு, அவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்காகப் பிளசண்டன் மூத்த குடிமக்கள் மையத்தில் தற்காலிக நிவாரண மற்றும் உதவி முகாம் அமைக்கப்பட்டு, அவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top