News

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு – சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர்

சென்னையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி வன்முறையை கையாண்டதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது.

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் மெரினா கடற்கரையில் திரண்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

இந்நிலையில், சென்னையில் எழும்பூரில் உள்ள ராஜராத்திரத்தினம் மைதானத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், நடிகைகள் ஆண்ட்ரியா, ரேவதி, நடிகர் மன்சூர் அலி கான், எழுத்தாளர் கரண் கார்கி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர்.

நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர் | Tamil Actors Actress In Chennai Anti Neet Protest

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

 

மேலும், நாடு தழுவிய அளவில் நாளை அமைதி போராட்டத்தை முன்னெடுக்க CJP அழைப்பு விடுத்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top