கொல்லப்பட்ட ஈரானிய ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஈராக் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமேனியின் இறுதிச்சடங்குகள் கடந்த ஜூலை 4 அன்று தொடங்கின. ஈரானின் மஷாத் நகரத்தில் கமேனியின் உடல் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையடுத்து, ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றான ஈராக்கின் நஜாஃபிற்கு கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி இன்று (ஜூலை 8) கொண்டு செல்லப்பட்டது.

அங்கு லட்சக்கணக்கான மக்கள் கமேனிக்குத் தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
மேலும், ஈராக்கில் நடைபெற்ற கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கலந்துகொண்டார்.
ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடங்கியதால் ஜனாதிபதி பெஷேஷ்கியன் உடனே தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
