Canada

கனடா எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலம் – அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி

கனடாவில் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்ட மூலம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது.

எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கனடா மத்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விளக்கும் முக்கியமான சட்ட முன் மொழி என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி இன்று புதிய சட்ட மூலத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

கனடாவில் இந்த நடவடிக்கை அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் சட்டங்களை கொண்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்தான பெண்டனில் மற்றும் அதனுடைய மூலப்பொருட்களின் கடத்தலைத் தடுக்க காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு புதிய கருவிகளை வழங்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது

இந்த புதிய சட்ட மூலம், கனடா எல்லை சேவைகளுக்கான நிறுவனத்துக்கு (Canada Border Services Agency) கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

இது, சட்டவிரோத பொருட்கள் மற்றும் திருடப்பட்ட கார்கள் கொள்கலன் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய புதிய சட்ட மூலத்தில் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

பெண்டனில் மற்றும் சட்டவிரோத குடிபெயர்வுகளை சமாளிக்க கனடா போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் புரிந்து கொள்ளச் செய்ய லிபரல் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top