News

சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு

 

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய சீனா மற்றும் தென் சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் லிசூய் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் பாதுகாப்பு அளவைத் தாண்டி 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடுவதால், கரையோரங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதே போன்று, ஹுபே மாகாணத்திலும், ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top