சூடானின் டார்பர் மாகாணத்தில் விமான நிலையத்தில், ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பியா நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்ரிக்க நாடான சூடானில், 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அதிகார மோதலால், ஆர்.எஸ்.எப்., எனப்படும் துணை ராணுவப் படை, ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியலா விமான நிலையத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த, 40 கூலிப் படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும், துணை ராணுவப் படைக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பியுள்ள ஆயுதங்களுடன் வந்த படகும் அழிக்கப்பட்டது.