தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். தற்போது மீண்டும் தென்மேற்கு வர்ஜீனியாவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது வீட்டிற்குள் இறந்து கிடந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதே நேரத்தில் மற்றொரு நபர் அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.
இவர்களை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களின் அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை.
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில், அமெரிக்காவில் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.