News

ஐ.நா உறுப்பு நாடுகளிடம் சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தாருங்கள் என ஐ.நா சபையின் உறுப்பு நாடுகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Shritharan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆனணயகத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை தொடர்பான முக்கிய குழு நாடுகள், இலங்கையை முறையான OHCHR வழிமுறைகளை முன்மொழிய வலியுறுத்த வேண்டும்.

அதாவது கவுன்சிலில் நிகழ்ச்சி நிரல் நான்கின் கீழ் இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமிக்க வேண்டும்.

மேலும் முன்னாள் OHCHR உயர் ஆணையர்கள் கோரியபடி இலங்கையை ICC இற்கு பரிந்துரைக்க வேண்டும்.

இலங்கை சிங்கள அரசு டிசம்பர் 2008 முதல் மே 2009 வரை 140000 இற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றதன் மூலம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது.

இந்த இனப்படுகொலைக்கு ஈழத் தமிழர்கள் சர்வதேச பாரபட்சமற்ற நீதியான விசாரணைகளை வழிமுறைகளைக் கோருகிறார்கள், கடந்த 16 ஆண்டுகளாக ஐ.சி.சி.யிடம் முறையிடுகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதி நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரச்சாரம் செய்தனர்.

அவர்கள் கோபமடைந்தனர், தமிழ் தாய்மார்கள் கவுன்சிலின் வரைவுத் தீர்மானத்தையும் இலங்கை குறித்த உயர் ஆணையரின் கடைசி அறிக்கையையும் எரித்தனர்.

ஈழத்தமிழிர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நிலைமாறுகால நீதியை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளுக்கு ஆதரவாக, தமிழ் சிவில் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்க அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top