கனடா அரசு, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி (Work Permit) விரைவாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்கள், வைத்தியர்கள், மருந்தாளர்கள், ஆய்வக நிபுணர்கள் போன்ற சுகாதாரத் துறையினர் மற்றும் பண்ணை மேற்பார்வையாளர்கள், இறைச்சி வெட்டுநர்கள், மீன் மற்றும் கடல் உணவு தொழிற்சாலை பணியாளர்கள் போன்ற வேளாண்மைத் துறையினர் இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை பெறுவார்கள் என IRCC தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் மூலம், LMIA அடிப்படையிலான வேலை அனுமதி, Francophone Mobility Work Permit, International Experience Canada போன்ற employer-specific அனுமதிகள் விரைவாக செயல்படுத்தப்படும். ஆனால், Post-Graduation Work Permit போன்ற open permits இதில் சேர்க்கப்படவில்லை.
மேலும், இந்த துறைகளில் குறைந்தது ஆறு மாத அனுபவம் உள்ளவர்கள், Express Entry முறையில் Permanent Residency (PR) பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்பு பெறுவார்கள்.
குறிப்பாக, சுகாதாரத் துறையில் பணிபுரிபவர்கள் குறைந்த Comprehensive Ranking System (CRS) மதிப்பெண்களுடன் கூட Invitation to Apply (ITA) பெறலாம்.
இந்த நடவடிக்கை தொழிலாளர் பற்றாக்குறையை குறைத்து, திறமையான குடியேற்றத்தை ஊக்குவிக்கும். இதன் மூலம், சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாளர்கள் விரைவாக சேர்க்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவார்கள் என கனடா அரசு கூறியுள்ளது.
கனடாவின் இந்த புதிய திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை எளிதாக்குவதோடு, நிரந்தர குடிவரவுக்கான பாதையையும் திறக்கிறது. இது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தொழிலாளர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும்.
