News

எப்ஸ்டீனின் கொடூர நடவடிக்கைகளில் உடனிருப்பு.. சிறைக்குள் வாய்திறக்க மறுக்கும் மெக்ஸ்வெல்

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தண்டனை பெற்றவரான கிஸ்லைன் மெக்ஸ்வெல், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இணைந்து மேற்கொண்ட பாலியல் கடத்தலுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டெக்சாஸ் சிறையில் இருந்து மூடிய கதவுக்குள் சாட்சியமளிக்க மெக்ஸ்வெல் மெய்நிகர் முறையில் முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது, அமைதியாக இருப்பதற்கான தனது உரிமையை கோரினார் என்று குடியரசுக் கட்சி ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.

இது வெளிப்படையாக மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றும் மெக்ஸ்வெல்லும் எப்ஸ்டீனும் செய்த குற்றங்கள் குறித்தும், சாத்தியமான கூட்டு குற்றவாளிகள் பற்றிய கேள்விகளையும் நாங்கள் கேட்க பல கேள்விகள் இருந்த போதிலும் பதிலை பெற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட மெக்ஸ்வெல்லின் சட்டத்தரணி David Oscar Markus, “அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மன்னிப்பு வழங்கினால், மெக்ஸ்வெல் முழுமையாகவும் நேர்மையாகவும் பேசத் தயாராக உள்ளார்” என தெரிவித்திருந்தார்.

“முழு உண்மையையும் கூறக்கூடிய ஒரே நபர் அவர்தான்; சிலருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் உண்மை முக்கியம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மெக்ஸ்வெல் முன்னிலையாகும் முன், எப்ஸ்டீனிடம் இருந்து உயிர்தப்பியவர்கள் குழு, கண்காணிப்பு குழுவிற்கு கடிதம் எழுதி, அவர் வழங்கும் எந்த தகவலையும் எச்சரிக்கையுடன் அணுகுமாறு கோரியுள்ளனர்.

எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டிருந்த “பல அதிகாரமுள்ள ஆண்கள்” குறித்த விவரங்களை வெளியிட மறுத்ததற்காகவும், சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பொருத்தமான ஒத்துழைப்பை வழங்காததற்காகவும் அவர்கள் மெக்ஸ்வெல்லை விமர்சித்து வருகின்றனர்.

உண்மையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் வழக்கில் அவருக்கு பின், அவருடன் இருந்த மெக்ஸ்வெல்லுக்கே உண்மைகள் தெரியும், இருப்பினும் அவர் இது தொடர்பில் எதுவும் தெரிவிக்காமல் இருப்பது சிக்கலை அதிகரிப்பதாக பலர் தெரிவித்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top