தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த சனிக்கிழமையன்று, தெற்கு ஈரானின் மினாப் நகரில் இந்தக் கோர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்பட சுமாா் 165 போ் கொல்லப்பட்டனா்.
இச்சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், இந்த மோதலின் கொடூரத்தையும் அப்பாவி உயிா்கள் பறிபோகும் வேதனையையும் காட்டுகின்றன.
இத்தாக்குதலை நடத்தியவா்களுக்கு, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் உண்மைகளை வெளிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. தற்போதைய சூழலில், இது ஒரு போா்க்குற்றமா என்பதைத் தீா்மானிப்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அனைத்து தரப்பினரும் அமைதி காத்து, பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அமெரிக்கா, இஸ்ரேல் விளக்கம்: இக்குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘அமெரிக்க படைகள் ஒருபோதும் பள்ளிக்கூடங்களைத் திட்டமிட்டுத் தாக்குவதில்லை’ என்று விளக்கமளித்தாா். அதேபோல், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
