News

இலங்கையருகே வெடித்த ஈரானிய கப்பலின் பின்னாலுள்ள இரகசிய சதி! அநுரவை சிக்க வைக்க போடப்படும் திட்டம்

மத்தியகிழக்கில் ஆரம்பித்த அமெரிக்க- இஸ்ரேல் – ஈரான் தாக்குதல்கள் தற்போது இலங்கையை அண்மித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம்(4) இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

தற்போது இது இலங்கை கடற்பரப்பிலே இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவிலே போர் பயிற்சி செய்து முடிந்து திரும்பிய போர்கப்பலே இவ்வாறு தாக்கப்பட்டது.

இந்தநிலையில் போர்பதற்றம் தற்போது உச்சம் பெற்றுள்ள நிலையில் இந்தியா எவ்வாறு 180 பேருடன் கப்பலை செல்ல அனுமதித்தது என்ற கேள்வியெழுந்துள்ளது.

ஏன் இலங்கைக்கு இந்த கப்பல் திருப்பப்பட்டது? இந்த விவகாரத்தில் இலங்கைகையும் அநுரகுமாரவையும் சிக்க வைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா?

என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது. எனவே இலங்கையும் அச்சத்தின் மத்தியிலே உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top