ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஓட்சுச்சி(Otsuchi) நகரை நோக்கி வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2,500-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற நகர நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக முயன்று வருகின்றனர்.
