காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற உதவிப் படகுகளை இஸ்ரேலிய கடற்படை நடுக்கடலில் வைத்துச் சிறைபிடித்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் நீண்டகால கடல்சார் முற்றுகையை உடைக்கும் நோக்கில், ‘குளோபல் சுமுத்’ (Global Sumud Flotilla) என்ற அமைப்பின் கீழ் சுமார் 58 படகுகள் மனிதாபிமான உதவிகளுடன் காஸா நோக்கிப் பயணத்தைத் தொடங்கின.
இதில் 48 நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இன்று அதிகாலை (ஏப்ரல் 30, 2026), கிரீஸ் நாட்டின் கிரீட் (Crete) தீவுக்கு அருகில் சர்வதேச கடல் எல்லையில் இந்தப் படகுகள் பயணித்துக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய கடற்படை அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் அதிவேகப் படகுகள் மூலம் அவற்றைச் சூழ்ந்துகொண்டது.
