உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற வாகனம் சாலையோரத்தில் உள்ள பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டாவில் தொடக்கப் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற வாகனம் சாலையோரத்தில் உள்ள பெரிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலை மற்றும் மாலை முழுவதும் குழந்தைகள் நீர்வீழ்ச்சியில் குளித்து, விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகளுடன் வாகனம் பள்ளிக்கு திரும்பியது. அப்போது வரும் வழியில், திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய பாறையில் மோதி கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். பலம் காயத்தால் துடிதுடித்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதியில் வசித்தவர்கள், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்க உதவி புரிந்தனர். இந்த விபத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பள்ளி தாளாளரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.
ஆசிரியர்கள் 3 பேர் உள்பட பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
