முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(18.5.2026) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு, உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டதுடன் இனப்படுகொலை நடைபெற்ற போது நேரடியாக பாத்து அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அங்கு நடந்த படுகொலையை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துக்காக இடம்பெற்ற படுகொலை நிகழ்வுகளுக்கு ஒன்று கூடி தமிழருக்கு நடந்த துயரத்தையும், துன்பத்தையும் பங்கெடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
